பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் 26 குணங்கள் ...

பகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். பல ‘ஆனந்தா’-க்களையும், ‘சுவாமிஜி’-க்களையும் தரிசிப்போர் இதை ‘செக் லிஸ்டாகப்’ (Check List) பயன் படுத்தலாம். அவர்கள் பத்தரை மாத்துத் தங்கமா, பம்மாத்துப் பேர்வழிகளா என்று விளங்கி விடும். 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 26 குணங்கள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் வெறும் ‘ஆசாமி’!!! 

இதோ கிருஷ்ண பரமாத்மா கொடுக்கும் பட்டியல்:  
1.அச்சமின்மை (அபயம்)  
2.மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி:)  
3.ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி) 4.தானம் (தேவையானோருக்கு பொருளுதவி) 
5.ஐம்புலனடக்கம் (தம:)  
6. வேள்வி செய்தல் (யஜ்ஞ:, இது ஞான வேள்வியாகவும் இருக்கலாம்) 7.சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது தேவாரம் திவ்வியப் பிரபந்தம் முதலியனவாகவும் இருக்கலாம்)  
8.தவம் (தப:)  
9.நேர்மை (ஆர்ஜவம்)  
10.உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை)  11.உண்மை (சத்யம்)  
12.சினமின்மை (அக்ரோத:)  
13.துறவு (த்யாகம்)  
14.அமைதி (சாந்தி)  
15.கோள் சொல்லாமை (அபைசுனம், No Gossip Policy)  
16.உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா)  
17.பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்) 
18.மிருதுதன்மை (மார்தவம், அடாவடிப்போக்கு இன்மை)  
19.நாணம் (ஹ்ரீ:, தீய செயல்களுக்கும் தன்னைப் புகழ்வதற்கும் வெட்கம்) 20.மன உறுதி (அசாபலம்) 
21.தைரியம், துணிவு (தேஜ:)  
22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா)  
23. மனம் தளராமை, செயலில் பிடிப்பு (த்ருதி/ திட உறுதி)  
24.சுத்தம் (சௌசம்)  
25.வஞ்சனை இன்மை (அத்ரோஹ:)  
26. செருக்கின்மை ( ந அதிமானிதா )    இந்த மூன்று ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்வது நல்லது. 

நாள்தோறும் இறைவனிடம் இந்த 26 குணங்களையும் அருளும்படி பிரார்த்திக்கலாம். 
இதோ மூன்று ஸ்லோகங்கள்: அபயம் ஸத்வஸம்சுத்திர் ஜ்ஞான யோக வ்யவஸ்திதி: தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம். அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ் த்யாக: சாந்தி ரபைசுனம் தயா பூதேஷ் வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ரசாபலம். தேஜ: க்ஷமா த்ருதி: சௌச மத்ரோஹோ நாதிமானிதா பவந்தி ஸம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத
Close Menu