1. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
  2. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
  3. திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப்.
  4. திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
  5. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது.
  6. திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  7. எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
  8. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  9. திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  10. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
  11. திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.