ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆசைப்பட்ட பொருட்களைக் கொடுத்தால் திருப்திப்படுத்தி விடலாம். ஆனால் ஒரு சிலருக்கு எதைக் கொடுத்தாலும் திருப்தியே ஏற்படாது. 

அப்படிப்பட்டவர்களை ஆண்டவனே வந்தாலும் உன்னைத் திருப்திப்படுத்த இயலாதுஎன்று சொல்வது வாடிக்கை. நாம் திருப்தியாக வாழ யார், யாரை எப்படித் திருப்திப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தேவர்களை ஹோமத்தினாலும்
முன்னோர்களை சிரார்த்தத்தினாலும்
தெய்வங்களை தரிசனத்தாலும்
பெற்றோர்களை பிரியத்தினாலும்
பிள்ளைகளை பாசத்தினாலும்
மனைவியை நேசிக்கும் அன்பாலும்
முதலாளியை உழைப்பின் மூலமும் திருப்திப்படுத்தலாம்