பெண் பற்றிய பொன்மொழிகள்

பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது


- மில்டன்


எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.


- மனு


ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது


- டிக்கன்ஸ்


பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு


- ஜேம்ஸ் எல்லீஸ்


உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே.


-லவல்


அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது.


-ஹீஸ்


பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது


- இக்பால்


பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.


- சைரஸ்


வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.


- கண்டேகர்


நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான்


- மெர்ஸன்


பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம்


- மாபசான்


பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம்


-துவிஜேந்திரலால்


ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்


- வால்டேர்


ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.


-ஜவஹர்லால் நேரு


காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்


- ஷேக்ஸ்பியர்


அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்


-ஜெயகாந்தன்


பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு


- லெனின்


சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்


- காந்தியடிகள்


அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது


- டேவிட்ஹ்யூம்


ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்


- ரூஸோ


பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்


- ரவீந்திரநாத் தாகூர்
Close Menu